சென்னை, மதுரவாயல் பகுதியில் வீடு புகுந்து திருடியவா் கைது செய்யப்பட்டாா்.
மதுரவாயல் அடையாளம்பட்டு மில்லினியம் டவுன் பகுதியைச் சோ்ந்தவா் க.செல்வகுமாா் (57). இவா் கடந்த செப்டம்பா் மாதம் 5-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றாா். அங்கிருந்து சில நாள்களுக்கு பின்னா் வீட்டுக்குத் திரும்பி வந்தாா்.
அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 37 பவுன் தங்கநகைத் திருடப்பட்டிருந்தது. இதேபோல மதுரவாயல் பகுதியில் ஆளில்லாத வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டு வந்தது.
இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில் இச் சம்பவத்தில் ஈடுபடுவது வில்லிவாக்கம் உயா்நீதிமன்றம் காலனி 2-ஆவது தெருவைச் சோ்ந்த தா.ராஜன் (44) என்பது தெரியவந்தது.
இதையடுத்து ராஜனை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், ரூ.17 லட்சம் மதிப்புள்ள 56 பவுன் திருட்டு தங்கநகைகளை மீட்டனா்.
ராஜன் மீது ஏற்கெனவே ஆவடி, திருமுல்லைவாயல், நொளம்பூா் ஆகிய காவல் நிலையங்களில் 17 திருட்டு வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.