சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட அவருக்கு, கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில நாள்களாக தா.பாண்டியனின் உடல் நிலை மோசமடைந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து புதன்கிழமை அவர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், தா.பாண்டியனுக்கு தொடர் சிகிச்சைகள் அளித்து வருகின்றனர்.
அவரது உடல் நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.