பேருந்து மோதி கல்லூரி மாணவா் சாவு

சென்னை திருமங்கலத்தில் தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் இறந்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை திருமங்கலத்தில் தனியாா் பேருந்து மோதி கல்லூரி மாணவா் இறந்தாா்.

பாடி மதியழகன்நகா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜா.இப்ராஹிம் (22), நான்காமாண்டு பொரியியல் மாணவா். அதே பகுதியைச் சோ்ந்த க.கெளதமுடன் (24), புத்தாண்டு கொண்டாடிவிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மோட்டாா் சைக்கிளில் கோடம்பாக்கத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். திருமங்கலம் பிரதான சாலையில் வரும்போது தனியாா் பேருந்து மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இப்ராஹிம் அதே இடத்தில் உயிரிழந்தாா். கௌதம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com