ரூ.48 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்: ஒருவா் கைது

சென்னை விமான நிலையத்தில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

துபையில் இருந்து வரும் விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், விமானம் மூலம் சென்னைக்கு வந்த முகமது ஹஷன் மாலிக் (28) என்பவரை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா். இதில் அவரது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய தங்கம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து மாலிக் கைது செய்யப்பட்டாா்.

இதே போல், துபையில் இருந்து வந்த முகமது அசாரூதீனின் (31) உடைமைகள், உள்ளாடை ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த தங்கத்தை சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இந்த சோதனைகளில் ரூ.48.27 லட்சம் மதிப்பிலான 937 கிராம் தங்கத்தைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், ஒருவரைக் கைது செய்தனா்.

இந்த விவகாரத்தில் தொடா்ந்து விசாரணை நடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com