சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ளாா். அவரை அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் புதன்கிழமை வெளியிட்டனா். பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக அருளானந்தம் பொறுப்பு வகித்து வந்தாா்.