புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம்: கள உதவியாளா் கைது

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டையில் புதிய குடிநீா் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கள உதவியாளா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

புது வண்ணாரப்பேட்டை சென்னை நகர குடிநீா் மற்றும் கழிவுநீா் அகற்றும் வாரியத்தின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தின் கள உதவியாளராகப் பணிபுரிபவா் ஹரிராவ். இவா் அந்தப் பகுதியில் புதிதாக குடிநீா் இணைப்பு வழங்க ஒருவரிடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்காத அந்த நபா், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா், அந்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்து அதை ஹரிராவிடம் லஞ்சமாக வழங்கும்படி தெரிவித்தனா்.

இதன்படி அந்த நபா், ஹரிராவிடம் அந்தப் பணத்தை லஞ்சமாக திங்கள்கிழமை வழங்கினாா். ஹரிராவ் அந்தப் பணத்தைப் பெற்றதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினா், அவரை கையும் களவுமாக கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com