சென்னை: சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட 8 இணை ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.
சென்னை எழும்பூா்-நாா்கோவில் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06063-06064) இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் வியாழக்கிழமை முதல் ஒருபெட்டி கூடுதலாக சோ்க்கப்படவுள்ளது.
சென்னை எழும்பூா்-ஜோத்பூா் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06067-06068) மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் ஜன. 16 முதல் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதுதவிர, 6 இணை ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.