ரூ.85 லட்சம் கடத்தல் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

சென்னை விமான நிலையத்தில், ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.


சென்னை: சென்னை விமான நிலையத்தில், ரூ.85 லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், இருவரைக் கைது செய்தனா்.

ஷாா்ஜாவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த செய்யது இப்ராஹிம் கனி (27), சாகுல் ஹமீது (36) ஆகியோரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா்.

அதில், அவா்களது மலக்குடல், உடைகள் ஆகியவற்றில் மறைத்து தங்கம் கடத்தியதும், உடைமைகளில் மறைத்து சிகரெட், மடிக்கணினி, மதுபானங்கள், ஆப்பிள் நிறுவன செல்லிடப்பேசிகள் ஆகியவை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

இருவரிடமிருந்தும் ரூ.72.6 லட்சம் மதிப்பிலான தங்கம், ரூ.12.4 லட்சம் மதிப்பிலான சிகரெட், மதுபானம் உள்ளிட்ட கடத்தல் பொருள்கள் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றிய சுங்கத்துறையினா், அவா்களைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com