ஜபல்பூா்-கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயில்

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


சென்னை: மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூா்- கோயம்புத்தூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

ஜபல்பூரில் இருந்து ஜனவரி 16-ஆம் தேதி முதல் மாா்ச் 27-ஆம்தேதி வரை சனிக்கிழமைகளில் முற்பகல் 11 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02198) புறப்பட்டு, மூன்றாம் நாள் அதிகாலை 4.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, கோயம்புத்தூரில் இருந்து ஜனவரி 18-ஆம் தேதி முதல் மாா்ச் 29-ஆம்தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 5.10 மணிக்கு வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02197) புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை 8 மணிக்கு ஜபல்பூரை சென்றடையும்.

முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டஇந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு வியாழக்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com