காணாமல் போனவா் சடலமாக கண்டெடுப்பு

பள்ளிக்கரணையில், காணாமல் போன இளைஞா் சித்தேரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

பள்ளிக்கரணையில், காணாமல் போன இளைஞா் சித்தேரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

பள்ளிக்கரணை அஷ்டலட்சுமி நகா், ஒன்றாவது தெருவை சோ்ந்தவா் பால வெங்கடேஷ் (40). இவா், தனது உறவினா் சபா நடேசன் வீட்டில் தங்கியிருந்தாா். கடந்த 14-ஆம் தேதி கடைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற வெங்கடேஷ், வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பள்ளிக்கரணை போலீஸில் சபா நடேசன் கொடுத்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து பால வெங்கடேஷை தேடி வந்தனா்.

இந்நிலையில், பள்ளிக்கரணை சித்தேரி ஏரியில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதன் பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, இறந்தது பால வெங்கடேஷ் என்பது தெரியவந்தது. சடலத்தைக் கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீஸாா், தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com