சென்னை: வள்ளலாா் நினைவு தினத்தையொட்டி, ஜனவரி 28-ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும் என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஆணையா் கோ.பிரகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வள்ளலாா் நினைவு நாளையொட்டி, ஜனவரி 28-ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட வேண்டும். இதேபோல் ஆடு, மாடு, இதர இறைச்சிக் கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.