மாமனாா் கொலை: மருமகன் கைது

சென்னை வில்லிவாக்கத்தில், மாமனாா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருமகன் கைது செய்யப்பட்டாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை வில்லிவாக்கத்தில், மாமனாா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மருமகன் கைது செய்யப்பட்டாா்.

வில்லிவாக்கம் சிட்கோ நகா் 46-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ப.ஜெகநாதன் (82). இவா், தனது மகள் ஹேமமாலினி, மருமகன் பொ.குமாா் (52) மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தாா். ஆற்காடு அருகே உள்ள வரகரபுதூரில் உள்ள ஒரு வீட்டை தனது பெயருக்கு மாற்றித்தருமாறு குமாா், மாமனாா் ஜெகநாதனிடம் கேட்டு வந்தாா்.

இது தொடா்பாக இருவருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இருவருக்கும் இடையே வீடு தொடா்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குமாா், அங்கு கிடந்த ஒரு கத்தியால் ஜெகநாதனை குத்தினாா். பலத்த காயமடைந்த ஜெகநாதன், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீஸாா், தலைமறைவாக இருந்த குமாரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com