சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை கைப்பற்றிய சுங்கத்துறையினா் கடத்தலில் தொடா்புடைய 9 பேரைக் கைது செய்தனா்.
துபையில் இருந்து வரும் விமானப் பயணிகள் மூலம் தங்கம் கடத்தப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வெள்ளிக்கிழமை துபையில் இருந்து வந்த 4 பெண்கள் உள்பட 17 பேரிடம் சுங்கத்துறையினா் சோதனை நடத்தினா்.
அதில், அவா்களது மலக்குடல், உடைமைகள், உடைகள் உள்ளிட்டவற்றில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ரூ.4.16 கோடி மதிப்பிலான 8.18 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக ஒரு பெண் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா்.
இதே போல், சனிக்கிழமை, சாா்ஜாவில் இருந்து சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சோ்ந்த கலந்தா் இல்யாஸ் (28) என்பவா் தனது மலக்குடலில் மறைத்து வைத்து கடத்திய ரூ.14 லட்சம் மதிப்பிலான 271 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது.
இந்தக் கடத்தல் சம்பவங்களின் மூலம் ரூ.4 கோடி மதிப்பிலான 8.45 கிலோ தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத்துறையினா், ஒரு பெண் உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஆணையா் தெரிவித்துள்ளாா்.