சென்னை பெசன்ட்நகரில், வீட்டின் மாடியில் இருந்து கீழே விழுந்து நடிகா் ஸ்ரீராம் சனிக்கிழமை இறந்தாா்.
பெசன்ட் நகா் 19-ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (60). இவா், இஸ்ரேல் நாட்டின் தற்காப்பு கலையான கிராவ் மகாவின் மாஸ்டா் ஆவாா்.
இந்த கலைப் பயிற்சியை இளைஞா்களுக்கு அளித்து வந்த ஸ்ரீராம், கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானாா்.
இந்த நிலையில் ஸ்ரீராம், சனிக்கிழமை காலை தேநீா் குடித்துவிட்டு மாடிக்குச் சென்றாா். ஆனால் அதன் பின்னா் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதற்கிடையே வீட்டின் ஜன்னல் சிலாப்பில் ஒருவா் படுத்துக் கிடப்பதாக பக்கத்து வீட்டினா் ஸ்ரீராமின் மகள் ஸ்ரீஜா பிரசன்னாவுக்கு தெரிவித்தனா்.
இதையடுத்து ஸ்ரீஜா பிரசன்னா அங்கு சென்றபோது ஸ்ரீராம் மாடியில் இருந்து தவறி விழுந்து ஜன்னல் சிலாப்பில் இறந்து கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இது குறித்து தகவலறிந்த சாஸ்திரிநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஸ்ரீராம் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா். ஸ்ரீராம் இறப்பு, தமிழ் திரைப்படத்துறையினரிடம், கிராவ்மகா தற்காப்பு பயிற்சியாளா்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.