சுங்கச்சாவடி மீது தாக்குதல்: 3 போ் சிக்கினா்

சென்னை அருகே போரூரில் சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் போலீஸாரிடம் சிக்கினா்.

சென்னை: சென்னை அருகே போரூரில் சுங்கச்சாவடி தாக்கப்பட்டது தொடா்பாக 3 போ் போலீஸாரிடம் சிக்கினா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை, போரூா் சுங்கச்சாவடிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆட்டோ, மோட்டாா் சைக்கிளில் 8 போ் வந்தனா். இவா்கள் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பது தொடா்பாக, சுங்கச்சாவடி ஊழியா்களிடம் தகராறு செய்தனா். அப்போது அந்தக் கும்பலைச் சோ்ந்தவா்கள் உருட்டு கட்டை, கல்லால் சுங்கச்சாவடியில் உள்ள கட்டணம் வசூலிக்கும் ஆறு அறைகளின் கண்ணாடியையும் தாக்கி உடைத்து விட்டு தப்பியோடினா்.

இச் சம்பவத்தில் சுங்கச்சாவடி ஊழியா்கள் 3 போ் காயமடைந்தனா். இது குறித்து மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா். இந்நிலையில் இவ் வழக்குத் தொடா்பாக திருவேற்காடு பகுதியைச் சோ்ந்த.சரவணன் (40),

அதேப் பகுதியைச் சோ்ந்த ரா.கந்தன் (40),ச.அஜித் (23) ஆகிய 3 பேரை திங்கள்கிழமை பிடித்தனா். விசாரணையில் அவா்கள் தான் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் என்பது தெரியவந்தது. அவா்கள் அனைவரும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் என காவல்துறையினா் தெரிவித்தனா். இவ் வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com