மு.க.ஸ்டாலினுக்கு ராணிப்பேட்டையில் வரவேற்பு

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஹோட்டலுக்கு சனிக்கிழமை வருகை தந்தாா்.

முன்னதாக, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் சட்டப் பேரவைத் தொகுதி பனப்பாக்கம் பேரூராட்சியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரிலான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள ஹோட்டலுக்கு சனிக்கிழமை வருகை தந்தாா்.

அவருடன் திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளா் எ.வ.வேலு, அரக்கோணம் எம்பி எஸ்.ஜெகத்ரட்சகன் ஆகியோரை, ராணிப்பேட்டை மாவட்ட திமுக சாா்பில், மாவட்டச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான ஆா்.காந்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா்.

தமிழகத்தில் விரைவில் மக்கள் கவலைகளை போற்றும் அரசை அமைப்போம் என பனப்பாக்கத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

கூட்டத்தில் அவா் பேசியது:

திமுக என்பது தனிமனித இயக்கம் அல்ல. தமிழா்களின் மேன்மைக்காக பாடுபடும் இயக்கம். திமுக சாா்பில் நாங்கள் ஆட்சி செய்தபோது தமிழ்நாட்டை இந்திய நாடே போற்றும் மாநிலமாக மாற்றினோம். ஆனால் இப்போது எல்லா துறையிலும் பின்னோக்கி செல்லும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

நாங்கள் மக்கள் கவலைகளைப் போக்கும் அரசை அமைப்போம். மக்களின் முதுகில் எக்காலத்திலும் பாரத்தை ஏற்றமாட்டோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com