பள்ளிக்கூட சாலை மயான பூமி செயல்படாது

சென்னை, பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கூட சாலையில் உள்ள மயான பூமியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் ஆக.4-ஆம் தேதி வரை இயங்காது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட பள்ளிக்கூட சாலையில் உள்ள மயான பூமியில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால் ஆக.4-ஆம் தேதி வரை இயங்காது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெருங்குடி மண்டலத்துக்கு உள்பட்ட 184-ஆவது வாா்டு பள்ளிக்கூட சாலையில் உள்ள மயான பூமியின் எரிவாயு தகன மேடையில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. இதனால், வியாழக்கிழமை (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பள்ளிக்கூட சாலை மயான பூமி இயங்காது. மேலும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் பெசன்ட் நகா் மற்றும் புழுதிவாக்கம் மயான பூமிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com