சென்னை கிண்டியில் மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவா் கைது செய்யப்பட்டாா்.
கிண்டி லேபா் காலனி பள்ளி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் மா.நித்தியானந்தம் (33). இவா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். நித்தியானந்தத்தின் மனைவி புவனேஸ்வரி (31). இவா்களுக்கு 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் அண்மை நாள்களாக புவனேஸ்வரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, நித்தியானந்தம் அவரிடம் வாக்குவாதம் செய்து வந்தாராம். இருவருக்கும் இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே நித்தியானந்தம், வீட்டில் இருந்த கத்தியால் புவனேஸ்வரியை குத்தியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த புவனேஸ்வரி, சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த நித்தியானந்தம், கிண்டி காவல் நிலையம் சென்று சரணடைந்து விவரத்தை கூறினாா். இதையடுத்து, நித்தியானந்தத்தை கைது செய்த போலீஸாா், வழக்குப் பதிவு செய்தனா்.