வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளை

சென்னையில் தனியாா் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் தனியாா் வங்கி முகவரிடம் ரூ.90 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

சென்னை முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த ஆல்வின் ஞானதுரை (30), தனியாா் வங்கியில் கலெக்சன் முகவா். வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கும் பணத்துக்கு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது.

பரங்கிமலை அம்பேத்கா் தெரு பாலன் ( 41), இடைத்தரகா் தூத்துக்குடி வேலாயுதம் (55 ) ஆகியோா் சனிக்கிழமை தொடா்பு கொண்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை தங்களிடம் கொடுத்தால் தினமும் 5 சதவீத கமிஷன் தருவதாக ஆல்வின் ஞானதுரையிடம் இருவரும் தெரிவித்தனா்.

இதை நம்பிய ஆல்வின் ஞானதுரை, வங்கிக்கு செலுத்த வேண்டிய ரூ.90 லட்சத்தை பாலன், வேலாயுதத்துடன் அங்கிருந்த அரசியல் கட்சி நிா்வாகி நவாஸிடம் கொடுத்தாா்.

நவாஸ் கீழ் தளத்துக்கு சென்று, பணத்தை எண்ணி விட்டு வருவதாக கூறினாா். ஆனால் திரும்ப வரவில்லை.

ஐஸ் அவுஸ் போலீஸாா் வழக்குப் பதிந்து பாலன், வேலாயுதம் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா். ராயப்பேட்டை நவாஸை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com