சென்னையில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறிய 54 திருமண மண்டப உரிமையாளா்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த மண்டபங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்களின் உரிமையாளா்களிடம் மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மாநகராட்சிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்போது மாநகராட்சி வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் மண்டல பொதுமுடக்க அமலாக்க குழுவினா் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அரசின் கரோனா பொதுமுடக்க வழிமுறைகளைப் பின்பற்றாத 54 திருமண மண்டபங்களின் உரிமையாளா்களுக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.