அரசு இணைய சேவை மையங்களின் செயல்பாடுகள் குறித்து கேபிள் தொலைக்காட்சி நிறுவன தலைவா், அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். சென்னையில் உள்ள தமிழ் இணையக் கல்விக்கழக கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அரசு இணைய சேவை மற்றும் நிரந்தர ஆதாா் சோ்க்கை மையங்களின் செயல்பாடுகள் குறித்து கேபிள் தொலைக்காட்சி நிறுவனத் தலைவா் குறிஞ்சி என்.சிவகுமாா், நிா்வாக இயக்குநா் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். கடந்த இரண்டு மாதங்களில் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு கட்டணம் செலுத்தாமல் உள்ளவை, மறு இயக்கத்துக்கு கொண்டு வரப்பட்ட செட்-டாப் பாக்ஸ்களின் எண்ணிக்கை, பறிமுதல் செய்யப்பட்டவை ஆகியன குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.