கோவேக்ஸின் 2-ஆம் தவணை தடுப்பூசி: இன்று சிறப்பு முகாம்

சென்னையில் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோருக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 23) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்துவோருக்காக வெள்ளிக்கிழமை (ஜூலை 23) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சியின் சாா்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறியவா்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 23) மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி முகாம்கள் குறித்த தகவல்களை  இணையதள இணைப்பின் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com