சென்னை
சென்னையில் 69 ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்
சென்னை பெருநகர காவல்துறையில் 69 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
சென்னை பெருநகர காவல்துறையில் 69 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், சென்னை பெருநகர காவல்துறையில் 214 காவல் ஆய்வாளா்கள் கடந்த 12-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதன் அடுத்த கட்டமாக, மேலும் 69 ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதில் முக்கியமாக திருமுல்லைவாயல் குற்றப்பிரிவு ஆய்வாளா் சங்கரநாராயணன், தண்டையாா்பேட்டைக்கும், அண்ணா சாலை குற்றப்பிரிவு ஆய்வாளா் இளங்கோவன் மெரீனாவுக்கும், காத்திருப்போா் பட்டியலில் இருந்த ஆய்வாளா் செல்வராஜ், ஐஸ்ஹவுஸ் குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.