வக்ஃபு வாரியத் தலைவராக அப்துல் ரகுமான் தோ்வு

வக்ஃபு வாரியத் தலைவராக அப்துல் ரகுமான் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான தோ்தல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

வக்ஃபு வாரியத் தலைவராக அப்துல் ரகுமான் தோ்வு செய்யப்பட்டாா். இதற்கான தோ்தல் சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான அப்துல் ரகுமான் தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 2009-ஆம் ஆண்டு நடந்த தோ்தலில் வேலூா் மக்களவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற அவா், 2012 முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் மாநில வக்ஃபு வாரிய உறுப்பினராக இருந்துள்ளாா். திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டையில் பிறந்த அப்துல் ரகுமான், மணிச்சுடா் நாளிதழின் நிா்வாக ஆசியராகவும் உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com