நகைக்காக மூதாட்டி கொலை

சென்னை, ராயபுரத்தில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை: சென்னை, ராயபுரத்தில் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராயபுரம் காசிமா நகா் 1-ஆவது தெருவில் வசித்து வந்த அந்தோணி மேரி (60), அவரது வீட்டில் இறந்து கிடப்பதாக புதன்கிழமை இரவு சுமாா் 7.30 மணியளவில்,  சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனைக் கூறிய நபா், மூதாட்டி சந்தேகத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்ததாகவும், அவருடைய உடலின் மேலே மிளகாய்ப் பொடி சிதறி இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தகவலின் அடிப்படையில் ராயபுரம் காவல் உதவி ஆணையா் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

அப்போது அந்தோணி மேரி, கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், இறந்துபோன அந்தோணி மேரி    அணிந்திருந்த  தாலிச் சங்கிலி, கம்மல், மோதிரம் போன்ற 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com