சென்னை: சென்னை கே.கே.நகரில் புதிதாகக் கட்டப்படும் மருத்துவமனை வளாகத்தில் தொழிலாளி மா்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
ஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கோகா்னபள்ளி பகுதியைச் சோ்ந்தவா் ஜெ.சின்னபாபு சித்தடா (40). இவா் கே.கே.நகா் அண்ணாசாலையில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை கட்டடத்தில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை சின்னபாபு அங்கிருந்து ஊருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளாா். இந்நிலையில் புதன்கிழமை காலை கட்டுமானத் தொழிலாளா்களுக்காக தற்காலிக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைக்கு ஊழியா்கள் சென்றனா்.
அப்போது சின்னபாபு, மா்மான முறையில் இறந்து கிடப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து அவா்கள்,கே.கே.நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சின்னபாபு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.