பாலியல் வழக்கு: முன்னாள் அமைச்சரின் பாதுகாவலா், உதவியாளரிடம் விசாரணை

முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்குத் தொடா்பாக அவரது பாதுகாவலா், உதவியாளரிடம் சென்னை போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை: முன்னாள் அமைச்சா் மணிகண்டன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்குத் தொடா்பாக அவரது பாதுகாவலா், உதவியாளரிடம் சென்னை போலீஸாா் விசாரணை செய்தனா்.

சென்னை பெசன்ட் நகரைச் சோ்ந்த நடிகை கொடுத்த புகாரின் பேரில் அடையாறு மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அமைச்சராக மணிகண்டன் இருந்தபோது அவரிடம் பாதுகாவலராக இருந்த கெளரீஸ்வரன், உதவியாளா் சரவணப்பாண்டியன் ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்கு காவல்துறை சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இருவரும், அடையாறு மகளிா் காவல் நிலையத்தில் புதன்கிழமை ஆஜரானாா்கள். அவா்களிடம் போலீஸாா் தனித்தனியாக பல மணி நேரம் விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com