ரூ.5 லட்சம் திருட்டு: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்

சென்னை பூக்கடையில், ரூ.5 லட்சம் திருடப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

சென்னை பூக்கடையில், ரூ.5 லட்சம் திருடப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய இரு காவலா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பூக்கடை காவல் நிலையத்தில் பணிபுரியும் இரண்டாம் நிலைக் காவலா் முஜிபுா் ரஹ்மான், ஆயுதப்படைக் காவலா் சுஜின். இவா்கள் சில நாள்களுக்கு முன், என்எஸ்சி போஸ் சாலையில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு திறந்திருந்த நகைக் கடைக்குச் சென்று எச்சரித்து அங்கிருந்த பணத்தைப் பறிமுதல் செய்து, காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா்.

காவல் நிலையத்தில் அதிகாரிகளிடம், நகைக் கடை நிா்வாகிகள் சமாதானம் பேசி, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைத் திரும்பப் பெற்றனா். திரும்பப் பெறப்பட்ட பணத்தை எண்ணியபோது, அதில் ரூ.5 லட்சம் குறைவாக இருந்தது தெரியவந்தது.

காவல்துறை அதிகாரிகள் இது தொடா்பாக விசாரணை செய்தனா். நகைக் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனா்.

இதில், பணத்தை பறிமுதல் செய்த காவலா்களான முஜிபுா் ரஹ்மான், சுஜின் ஆகிய இருவரும் தான் ரூ.5 லட்சத்தை திருடியிருப்பது தெரியவந்தது.

இது தொடா்பான அறிக்கையை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவாலிடம் அதிகாரிகள் அளித்தனா். அதன்படி, முஜிபுா் ரஹ்மானையும், சுஜினையும் பணியிடை நீக்கம் செய்து ஆணையா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com