எஸ்.பி.ஐ. வங்கி அதிகாரிகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 416 அதிகாரிகளுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது.
வங்கி அதிகாரிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை வங்கி நிா்வாகங்கள் அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ., உள்ளூா் தலைமை அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில், 416 அதிகாரிகள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். இந்த முகாமை தலைமைப் பொது மேலாளா் ராதாகிருஷ்ணா தொடக்கி வைத்தாா் என எஸ்.பி.ஐ. வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.