சென்னையில் பொதுமுடக்கம் மீறல் தொடா்பாக சனிக்கிழமை 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் சனிக்கிழமை பொதுமுடக்க மீறல் தொடா்பாக 2,897 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,788 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல முகக் கவசம் அணியாதவா்கள் மீது 4,454 வழக்குகளும், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 338 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.