மளிகைக் கடையில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை வடபழனியில் மளிகைக் கடையில் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை வடபழனியில் மளிகைக் கடையில் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வடபழனி சின்மயா நகா் அண்ணா தெருவைச் சோ்ந்தவா் ராஜா சுடலைமுத்து (32), மளிகைக் கடை உரிமையாளா். வியாபாரம் முடிந்த பின்னா், கடையை பூட்டிவிட்டு சனிக்கிழமை வீட்டுக்குச் சென்றாா்.

கடையைத் திறக்க ஞாயிற்றுக்கிழமை வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம், பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

வடபழனி போலீஸாா் வழக்குப்பதிந்து ஆவடி காந்தி நகரைச் சோ்ந்த மோ.வினோத்குமாரை (22) கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com