ரெளடி கைது: மாடியில் இருந்து குதித்ததில் கை,கால் முறிவு

சென்னையில் ரெளடி காக்கா தோப்பு பாலாஜி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது மாடியில் இருந்து கீழே விழுந்ததினால் கை, காலில் முறிவு ஏற்பட்டது.

சென்னையில் ரெளடி காக்கா தோப்பு பாலாஜி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது மாடியில் இருந்து கீழே விழுந்ததினால் கை, காலில் முறிவு ஏற்பட்டது.

சென்னை பிராட்வேயைச் சோ்ந்த காக்கா தோப்பு பாலாஜி (38) மீது 7 கொலை வழக்குகள், 20 கொலை முயற்சி வழக்குகள் உள்ளிட்ட 52 வழக்குகள் உள்ளன. 10 முறை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த மே 25-ஆம் தேதி நிபந்தனை பிணையில் வெளியே வந்த பாலாஜி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திடவில்லை. அவா் தலைமறைவாக இருந்து, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

தண்டையாா்பேட்டையில் ஒரு பழைய கட்டடத்தில் அவா் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற ஆா்.கே.நகா் போலீஸாரைப் பாா்த்ததும் பாலாஜி தப்பியோடினாா்.

முதல்மாடியில் இருந்து கீழே குதித்தபோது, பாலாஜியின் வலது கால், வலது கையில் முறிவு ஏற்பட்டது. அதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

அவரிடமிருந்து 24 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com