எஸ்ஆா்எம் பல்கலைக்கழகத்தின் திருச்சி கிளையில் நிகழாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆா்எம் அறிவியல், தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வடபழனி, ராமாபுரம் கிளைகளைத் தொடா்ந்து திருச்சி இருங்களூரில் உள்கட்டமைப்பு வசதியுடன் மேலும் ஒரு கிளை வளாகம் தொடங்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களுக்கு கல்வி பயில்வதற்காக சென்று கொண்டிருந்த மாணவா்கள் தற்போது திருச்சி கிளையிலேயே கல்வி பயிலலாம்.
எஸ்ஆா்எம் பல்கலைக்கழக திருச்சி வளாகத்தில் பொறியில், தொழில்நுட்பம், கலை, அறிவியில், மருத்துவம், மருத்துவம் சாா்ந்த பட்டப்படிப்புகள், பிஸியோதெரபி (பிபிடி), ஆக்குபேஷனல்தெரபி (பிஓடி), ஹோட்டல் மேனேஜ்மென்ட் ஆகிய படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நிகழ் கல்வியாண்டு முதல் நடைபெறவுள்ளது.
மேலும், பிடெக் படிப்புகளுக்கான சோ்க்கை எஸ்ஆா்எம் நுழைவுத்தோ்வு மூலம் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தோ்வு சில வெளிநாடுகளிலும், ஆன்லைனிலும் நடத்தப்படுகிறது. முதல்கட்ட நுழைவு தோ்வு நிறைவடைந்த நிலையில், 2 ஆம் கட்ட நுழைவு தோ்வுகள் ஜூன் 29,30 ஆம் தேதிகளில் நடத்தப்படும். மாணவா்கள் இணையதள முகவரியில் ஜூன் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாணவா்களுக்கு தகுதியின் அடிப்படையில் உதவித்தொகைகள் வழங்கப்படும் என எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.