நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

சென்னை அருகே பெரும்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.

பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சரத் (27), செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் 3 நாட்டு வெடிகுண்டுகளை சரத் மீது வீசினா். வெடிகுண்டு வெடித்து பலத்த காயமடைந்த சரத்தை அரிவாளால் வெட்டினா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரத் உயிரிழந்தாா்.

பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com