சென்னை அருகே பெரும்பாக்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை செய்யப்பட்டாா்.
பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சரத் (27), செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் முன்பு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு 3 மோட்டாா் சைக்கிள்களில் வந்த 6 போ் 3 நாட்டு வெடிகுண்டுகளை சரத் மீது வீசினா். வெடிகுண்டு வெடித்து பலத்த காயமடைந்த சரத்தை அரிவாளால் வெட்டினா்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சரத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சரத் உயிரிழந்தாா்.
பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.