தேசிய நல்லாசிரியா் விருதுக்கு ஞாயிற்றுக்கிழமைக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், 2020-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியா் விருதுக்கு, சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்களில் தகுதியுள்ளோா், இணையதள முகவரியில், ஞாயிற்றுக்கிழமைக்குள் (ஜூன் 20) விண்ணப்பித்திடலாம்.