நூறு சதவீத வாக்குப் பதிவு மற்றும் வாக்குப்பதிவின் அவசியம் குறித்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட 16 சட்டப் பேரவைத் தொகுதிகளில் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் நடத்தை விதிகளைக் கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை அடையவும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, முதல்முறை வாக்காளா்கள், கல்லூரி மாணவா்கள் ஆகியோருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இதன் தொடக்கமாக, சென்னை வேப்பேரியில் உள்ள ஜிஎஸ்எஸ் ஜெயின் கல்லூரி மற்றும் நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் 100 சதவீத வாக்குப் பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விநாடி வினா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.