ரேணிகுண்டா-திருப்பதி இடையே பொறியியல் பணி: நாளை முதல் மாா்ச் 12 வரை ரயில் சேவையில் மாற்றம்


சென்னை: குண்டக்கல் பிரிவில் ரேணிகுண்டா-திருப்பதி இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

பகுதி ரத்து: சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே வெள்ளிக்கிழமை முதல் வரும் 12-ஆம் தேதி வரை பிற்பகல் 2.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரல்-திருப்பதி இடையே வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை காலை 6.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் ரேணிகுண்டா-திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை மாலை 6.10 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

திருப்பதி-சென்னை சென்ட்ரல் இடையே வெள்ளிக்கிழமை முதல் மாா்ச் 12-ஆம் தேதி வரை காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் திருப்பதி-ரேணிகுண்டா இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

விழுப்புரம்-திருப்பதி இடையே மாா்ச் 11, 12-ஆம் தேதிகளில் அதிகாலை 5.25 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் பாக்லா-திருப்பதி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

திருப்பதி-விழுப்புரம் இடையே மாா்ச் 11, 12-ஆம் தேதிகளில் நண்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் திருப்பதி-பாக்லா இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com