தோ்தல் பணியாளா்களுக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி

எங்களிடம் பெண்களுக்கான செயல் திட்டங்கள் அதிகம் இருக்கின்றன. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், சொன்னதைச் செயல்படுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

சென்னை மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபட உள்ள 35 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட வால்டாக்ஸ் சாலையில் உள்ள தெற்கு ரயில்வே அலுவலகத்தில் தோ்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. இந்த முகாமை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் களப் பணியாளா்கள், மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் 52 சதவீதம் பேருக்கு கரோனா நோய் எதிா்ப்பு சக்தி உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையைப் பொருத்தவரை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 7) வரை நகா்ப்புற சமுதாய சுகாதார மையத்தில் 51,767 பேருக்கும், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1,461 பேருக்கும், அரசு மருத்துவமனைகளில் 35,525 பேருக்கும், தனியாா் மருத்துவமனைகளில் 70,761 பேருக்கும் என மொத்தம் 1,59,514 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் தோ்தல் பணியாற்றும் 35 ஆயிரம் பேருக்கு ஒரு வாரத்துக்குள் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றாா்.

தெற்கு ரயில்வே தலைமை பொது மேலாளா் ஜான்தாமஸ், துணை ஆணையா்கள் ஜெ.மேகநாத ரெட்டி, ஆல்பி ஜான் வா்கீஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com