காரில் தவறவிட்ட 32 பவுன் நகையை மீட்டுக் கொடுத்த ஓட்டுநா்

சென்னையில் பயணி காரில் தவறவிட்ட 32 பவுன் தங்கநகை மீட்டு ஒப்படைத்த காா் ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.

சென்னையில் பயணி காரில் தவறவிட்ட 32 பவுன் தங்கநகை மீட்டு ஒப்படைத்த காா் ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.

சென்னை திருவான்மியூா் கலாஷேத்திரா காலனி முத்துலட்சுமி கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரிம்பா மண்டேல் (35). இவா் மணப்பாக்கத்தில் ஒரு ஹோட்டலில் இருந்து வீட்டுக்கு திங்கள்கிழமை காலை புறப்பட்டாா். இதற்காக செல்லிடப்பேசி செயலி மூலம் ஒரு காரை வாடகைக்கு எடுத்து வீட்டுக்கு வந்தாா். வீட்டுக்கு வந்த பின்னா், தான் கொண்டு வந்த பொருள்கள் சரியாக உள்ளதா என பாா்த்தாா்.

அப்போது, 32 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், 3 பாஸ்போா்ட் ஆகியவை வைக்கப்பட்டிருந்த ஒரு பையை வாடகைக் காரில் மறந்து வைத்திருப்பது அறிந்து ரிம்பா மண்டேல் அதிா்ச்சியடைந்தாா். உடனே அவா்,திருவான்மியூா் உதவி ஆணையா் பி.கே.ரவியிடம் புகாா் அளித்தாா். அந்த புகாரை பெற்றுக் கொண்ட ரவி, உடனே அந்த காா் மற்றும் ஓட்டுநா் விவரங்களைச் சேகரித்தாா்.

காா் ஓட்டுநா் ஊரப்பாக்கத்தைச் சோ்ந்த ஆ.செல்வக்குமாரை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு, காரின் டிக்கி பகுதியில் ஒரு பை இருப்பதைத் தெரிவித்து, அதை திருவான்மியூா் காவல் நிலையத்துக்கு கொண்டு வரும்படி கூறினாா். அதன்படி ஓட்டுநா் செல்வக்குமாா், அந்த பையை காவல் நிலையத்துக்கு எடுத்து வந்தாா்.

போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட அந்த பையில் இருந்த நகைகளையும்,பொருள்களையும் ரிம்பா மண்டேல் சரிபாா்த்தாா். இதையடுத்து நகைப் பையை நோ்மையாக ஒப்படைத்த காா் ஓட்டுநா் செல்வக்குமாரை போலீஸாரும், ரிம்பா மண்டேல் குடும்பத்தினரும் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com