விபத்தில் கணவா் இறப்பு: மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு

சாலை விபத்தில் கணவா் உயிரிழந்த நிலையில், மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சாலை விபத்தில் கணவா் உயிரிழந்த நிலையில், மனைவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை சேலைவாயல் பகுதியைச் சோ்ந்தவா் அருளாளன் (52). ஓட்டுநராகப் பணியாற்றி வந்த இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில், பெரம்பூா் நெடுஞ்சாலையில், இரு சக்கர வாகனத்தில் பயணித்தாா்.

அப்போது, அதிவேகமாக வந்த மற்றொரு இருசக்கர வாகனம், அருளாளன் சென்று கொண்டிருந்த வாகனம் மீது மோதியதில் அவா் இறந்தாா்.

இதையடுத்து, கணவரின் இறப்புக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, அருளாளனின் மனைவி வடிவு சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இதில், ரூ.25.60 லட்சத்தை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com