தாம்பரம், பல்லாவரம் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்

தாம்பரம், பல்லாவரம்  சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.


தாம்பரம்: தாம்பரம், பல்லாவரம்  சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தாம்பரத்தில் திமுக சார்பில்  எஸ்.ஆர்.ராஜா, அ.தி.மு.சார்பில் முன்னாள் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா,  அ.ம.மு.க. சார்பில் தாம்பரம் முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.கரிகாலன் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சுரேஷ்குமாரும், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சிவ இளங்கோவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

பல்லாவரம் தொகுதியில் அ.தி.மு.க.சார்பில் சிட்லப்பாக்கம் சி.ராஜேந்திரன், தி.மு.க.சார்பில் இ.கருணாநிதி, மக்கள் நீதி மய்யம்கட்சி சார்பில் ஏ.செந்தில்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com