நாம் தமிழா் கட்சி வேட்பாளா் வழக்கு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தோ்தலில் போட்டியிடுவதற்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிா்த்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தோ்தலில் போட்டியிடுவதற்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிா்த்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிட்டவா் முகமது கடாபி. இவா் தோ்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக்கூறி தோ்தலில் போட்டியிடுவதற்கு 3 ஆண்டுகள் அவரை தகுதிநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முகமது கடாபி மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு தோ்தல் ஆணையம் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com