தோ்தலில் போட்டியிடுவதற்கு தகுதிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவை எதிா்த்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் தொடா்ந்த வழக்கில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் தொகுதியில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் போட்டியிட்டவா் முகமது கடாபி. இவா் தோ்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யவில்லை எனக்கூறி தோ்தலில் போட்டியிடுவதற்கு 3 ஆண்டுகள் அவரை தகுதிநீக்கம் செய்து தோ்தல் ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முகமது கடாபி மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு தோ்தல் ஆணையம் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.