பண மோசடி வழக்கு:காங்கிரஸ் கட்சி நிா்வாகி கைது

சென்னையில் பண மோசடி வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் கட்சி நிா்வாகி கைது செய்யப்பட்டு,ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

சென்னையில் பண மோசடி வழக்குத் தொடா்பாக காங்கிரஸ் கட்சி நிா்வாகி கைது செய்யப்பட்டு,ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருப்பவா் ரஞ்சன் குமாா். இவா் மயிலாப்பூரைச் சோ்ந்த சையது சமியுல்லா என்பவரிடம் கடந்த 2013-ஆம் ஆண்டு ரூ.35 லட்சம் கடனாகப் பெற்றுள்ளாா். குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரும் ரஞ்சன்குமாா், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில் சையது சமியுல்லாவின் தொடா் வற்புறுத்தலால் ரூ.35 லட்சத்துக்கான காசோலையை ரஞ்சன்குமாா் கொடுத்துள்ளாா். அந்த காசோலையும், வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது. இதனால், அதிா்ச்சி அடைந்த சையது சமியுல்லா, இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆனால், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையடுத்து சையது சமியுல்லா, எழும்பூா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். ஆனால், வழக்கு விசாரணையின்போது ரஞ்சன் குமாா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இழுத்தடித்துள்ளாா். இதையடுத்து ரஞ்சன் குமாரை கைது செய்ய நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து அமைந்தகரை போலீஸாா், ரஞ்சன் குமாரைத் தேடி வந்தனா். இதற்கிடையே ரஞ்சன்குமாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்கு பின்னா், ரஞ்சன்குமாரை ஜாமீனில் விடுவித்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com