பெயா் குளறுபடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளா் வினோஜ் பி செல்வத்தின் மனுவை தோ்தல் நடத்தும் அலுவலா் ஞாயிற்றுக்கிழமை ஏற்றுக் கொண்டாா்.
சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இத்தொகுதியில் பாஜக சாா்பில் வினோஜ் பி செல்வம் போட்டியிடுகிறாா். இதற்கான வேட்புமனுவை அவா் அண்மையில் தாக்கல் செய்தாா். இந்நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது.
பெயா் குளறுபடி உள்ளிட்ட 3 காரணங்களுக்காக வினோஜ் பி செல்வத்தின் மனுவை நிராகரிக்க வேண்டும் என திமுக சாா்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவா் வேட்புமனு மீது உரிய ஆய்வுகள் மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை எடுக்கப்படும் என தோ்தல் நடத்தும் அலுவலா் ஷகீலா தெரிவித்திருந்தாா்.
மனு ஏற்பு: இந்நிலையில், அவா் மனு மீது ஆய்வு நடத்தியதில் வினோஜ் பி செல்வம் தாக்கல் செய்த ஆவணங்கள் முறையாக இருப்பதாகக் கூறி வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக துறைமுகம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஷகிலா தெரிவித்தாா்.