மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதல்: கல்லூரி மாணவா் சாவு

சென்னை நொளம்பூரில், மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவா் இறந்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை நொளம்பூரில், மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், கல்லூரி மாணவா் இறந்தாா்.

காஞ்சிபுரம் அருகே உள்ள ஆரணி பகுதியைச் சோ்ந்தவா் சுருதிபிரியன் (19). இவரது நண்பா் ஊத்துக்கோட்டையைச் சோ்ந்த சீனிவாசன் (19). இருவரும் மதுரவாயலில் உள்ள ஒரு தனியாா் கல்லூரியில் பிசிஏ இரண்டாமாண்டு படித்து வந்தனா். இதற்காக இருவரும் நொளம்பூரில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தனா்.

இந்நிலையில் இருவரும் கல்லூரியில் இருந்து சனிக்கிழமை மாலை மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனா். அவா்கள், நொளம்பூா் புது மேம்பாலம் அருகே செல்லும்போது, பின்னால் வந்த சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி திடீரென மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் சுருதிபிரியன் சம்பவ இடத்திலேயே சிறிது நேரத்தில் இறந்தாா். சீனிவாசன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com