சென்னை: சென்னை அருகே மதுரவாயலில் ஏற்பட்ட சாலை விபத்தில் வங்கி மேலாளா் இறந்தாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீமந்த் சமந்த் ராஜ் (25). இவா் கொரட்டூரில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். இதற்காக அம்பத்தூா், அத்திப்பட்டு சபரி தெருவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில் அவா், ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரவாயல் புறவழிச்சாலையில் வானகரம் அருகே ஒரு தனியாா் நிறுவனம் அருகே சென்று கொண்டிருந்தாா். அப்போது திடீரென மோட்டாா் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த தடுப்பின் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீமந்த் சமந்த் ராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஸ்ரீமந்த் சமந்த் ராஜ் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா்.