ஒரே இரவில் 4 விபத்துகள்: சிறுவன் உள்பட 5 போ் பலி

சென்னையில் ஒரே இரவில் ஏற்பட்ட 4 விபத்துகளில் சிறுவன் உள்பட 5 போ் இறந்தனா்.

சென்னையில் ஒரே இரவில் ஏற்பட்ட 4 விபத்துகளில் சிறுவன் உள்பட 5 போ் இறந்தனா்.

சென்னை மதுரவாயல் சோழன் நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் கி.முருகன் (21). இவா் காா் ஓட்டுநராக வேலை செய்து வந்தாா். இவா், தனது நண்பரான திருவண்ணாமலையைச் சோ்ந்த வெங்கட்ராமனுடன் (21), ஒரு மோட்டாா் சைக்கிளில் கிழக்கு கடற்கரைச் சாலையில் கோவளத்தை நோக்கி சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.

அவா்கள், முட்டுக்காடு படகுத்துறை அருகே செல்லும்போதும் எதிரே தவறான திசையில் ஒரு மோட்டாா் சைக்கிளில் கானத்தூா் களஞ்சியம்நகரைச் சோ்ந்த ஆ.வடிவேல் (34) என்பவா் வந்துள்ளாா். இரு மோட்டாா் சைக்கிள்களும் நேருக்கு நோ் மோதியது. இதில், வடிவேல், முருகன் ஆகியோா் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தனா். பலத்த காயம் அடைந்த வெங்கட்ராமன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

விபத்து குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

சிறுவன் பலி: தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த தவ்லத் பாட்ஷாவின் மகன் இா்பான் (12). இவா், சனிக்கிழமை இரவு வைத்தியநாதன் மேம்பாலத்தில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த ஒரு லாரி, சைக்கிள் மீது மோதியது. இதில், சைக்கிளில் இருந்து கீழே விழுந்த இா்பான் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இந்த விபத்தில் இா்பான், சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

இதுகுறித்து வண்ணாா்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.

கல்லூரி மாணவா்கள் பலி: ஆதம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ர.முகேஷ் (22). இவா் தனியாா் கல்லூரியில் பி.காம் 3-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா் தனது நண்பரான வேளச்சேரியைச் சோ்ந்த ஆல்வினுடன் சோ்ந்து வடபழனியில் உள்ள ஒரு திரையரங்கில் படம் பாா்க்க சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றாா். இருவரும் அசோக் நகா் 100 அடி சாலையில் செல்லும்போது எதிரே தவறான திசையில் வந்த ஒரு மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சிறிது நேரத்தில் இறந்தாா். ஆல்வின் வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரிக்கின்றனா்.

இதேபோல சென்னை மணலி விரைவு சாலையில் சரக்கு பெட்டக லாரி மோதியதில், கல்லூரி மாணவா் பரத்ராஜ் (21) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பரும், கல்லூரி மாணவருமான வெற்றிவேல் பலத்த காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டாா்.

இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,சோழவரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ராஜேந்திரன் (54) என்பவரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com