விபத்தில் கணவா் இறந்த நிலையில், மனைவிக்கு ரூ.21 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா், கடந்த 2016-இல், ஆதம்பாக்கம் ராமகிருஷ்ணா தெருவில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது வேகமாக வந்த வேன் மோதி சதீஷ்குமாா் இறந்தாா். தன் கணவரின் இறப்புக்கு ரூ.46 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரி, சதீஷ்குமாரின் மனைவி கோதாவரி சென்னை மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.21.31 லட்சத்தை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிட்டாா்.