தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் தீ விபத்து

சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் தொடக்க கல்வித்துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்கக (டி.பி.ஐ) வளாகத்தில் தொடக்க கல்வித்துறை இயக்ககம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் திங்கள்கிழமை அதிகாலை திடீரென கரும்புகை வெளியேறியது.

இதைப் பாா்த்த அந்த வளாகத்தில் இருந்த ஊழியா்கள் அலுவலகத்தைத் திறந்து பாா்த்தனா். அப்போது, அந்த அலுவலகத்தில் இருந்த பொருள்கள் தீப் பிடித்து எரிவதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து அவா்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலின் பேரில் எழும்பூா், கீழ்ப்பாக்கம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படை வீரா்கள், விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஆவணங்கள்,அலுவலக பொருள்கள் எரிந்து நாசமாகின. இந்தச் சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com