எழும்பூா் தொகுதி வேட்பாளா்கள் பிரசாரம்

எழும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

எழும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

எழும்பூா் தொகுதியில் அதிமுக கூட்டணி சாா்பில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் ஜான்பாண்டியன், தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை 58-ஆவது வாா்டில் பல்வேறு பகுதிகளில் நடந்து சென்று, ஆதரவு திரட்டினாா். தோ்தலில்தான் வெற்றி பெற்றால் எழும்பூா் தொகுதியின் முன்னேற்றத்துக்கு என்னென்ன பணிகளை செய்வேன் என்பது அடங்கிய 12 வாக்குறுதிகளை துண்டுப் பிரசுரங்களாக வழங்கினாா்.

திமுக வேட்பாளா் பரந்தாமன் பி.கே.காலனி, புளியந்தோப்பு 1-ஆவது தெரு முதல் 5-ஆவது தெரு, மாநகராட்சி சந்து, கனகராஜ் தோட்டம், மோதிலால் தெருவில் நடந்து சென்று வாக்கு சேரித்தாா்.

மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் பிரியதா்ஷினி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கீதாலட்சுமி படாளம் சந்தை பகுதியிலும் தேமுதிக வேட்பாளா் பிரபு தொகுதியின் பல்வேறு இடங்களிலும் பிரசாரம் மேற்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com